மனிதர்கள் ஏற்படுத்தும் ஒலி மாசை சமாளிக்க டால்பின்கள் உரத்த குரலில் பேசுகின்றன. இது பற்றிய ஆய்வுகள் மனிதர்கள் உருவாக்கும் ஒலி மாசு கடல்வாழ் உயிரினங்களுக்கு உண்டாக்கும் பாதிப்பு கள் பற்றிய கவலையை அதிகரித்துள்ளது. இரைச்சல் அதிகமாக உள்ள உணவகங்கள் அல்லது பொது இடங்க ளில் நாம் மற்றொருவரிடம் பேசமுடியாமல் ஏற்படும் விரக்தியை நம் வாழ்வில் பல சமயங்களில் அனுபவித் திருக்கிறோம். இதே நிலையை டால்பின்களும் எதிர்கொள்கின்றன.
இரைச்சல் அதிகமாக இருக்கும் நேரங்களில் அவை தங்களுக்குள் சத்தம் போட்டு பேசுகின்றன. சத்தம் அதிக மாக உள்ள சூழலில் டால்பின்கள் தங்களுக்குள் தகவல் தொடர்புகொள்ள, ஒன்றிணைந்து செயல்பட கஷ்டப்படு கின்றன. அதிக சத்தமுள்ள இடங்களில் நாம் குரலை உயர்த்திப் பேசுவது போலவே டால்பின்களும் நடந்து கொள்கின்றன என்று பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவரும் ஆய்வுக்கட்டுரையின் முதன்மை ஆசிரியருமான பெர்னில் சோரன்சென் (Pernille Sorensen) கூறுகிறார்.
க்ளிக் சத்தங்களும் விசில் சத்தங்களும்
பாட்டில் மூக்கு டால்பின்களிடையில் (Bottle nose dolphins) நடத்தப்பட்ட இது குறித்த ஆய்வுக்கட்டுரை கரண்ட் பயாலஜி (Current biology) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. டால்பின்கள் புத்திசாலியான சமூக விலங்குகள். க்ளிக் மற்றும் விசில் சத்தங்கள் மூலமே இவை தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன.
சூழல் அறியும் திறனைப் பயன்படுத்தி வேட்டையாடு கின்றன. வழியறிகின்றன. அதனால் ஆழ்துளை தோண்டு தல் (drilling), கப்பல் போக்குவரத்து போன்ற மனிதர்கள் ஏற்படுத்தும் பேரிரைச்சலால் இவற்றின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. டெல்ட்டா (Delta), ரீஸ் (Reese) என்னும் இரண்டு பாட்டில் மூக்கு டால்பின்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
டால்பின்களின் ஒருங்கிணைப்புத் திறன்
பரிசோதனைகள் பின்புல ஓசையால் இவற்றின் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி ஆராயப்பட்டது. ஒரு விநாடிக்குட்பட்ட நேரத்திற்குள் இரண்டு டால்பின்களும் அவற்றுக் கிடையில் ஒத்துழைத்து குறுகிய நீர்வழியொன்றில் பொருத்தப்பட்ட பொத்தான்களை அமுக்கும் செயலைச் செய்யுமாறு கோரப்பட்டன. இதே செயல் சில மனிதர்களுக்கே கடினமாக இருப்பது முந்தைய ஆய்வில் தெரியவந்தது.
ஒவ்வொரு பரிசோதனையின்போதும் இரண்டு டால் பின்களும் ஒரு ஆரம்பப்புள்ளியில் இருந்து விடுவிக்கப் பட்டன. ஒரு சில சோதனைகளில் இரண்டு டால்பின் களில் ஒன்று 5 முதல் 10 விநாடிகள் பிடித்து வைக்கப் பட்டது. இதனால் அவை தங்களுக்கு இடையில் குரல் பரிமாற்றங்களைப் பயன்படுத்தியே பொத்தான்களை அமுக்கும் வேலையைச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
இரைச்சல் நிறைந்த நேரத்தில் நீருக்கடியில்
பொருத்தப்பட்ட ஒலிபெருக்கியின் மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தப்பட்டு ஆராயப்பட்டபோது இரு டால்பின்களும் அதிகப்படியான ஓசையை தங்கள் குரலின் அளவு மற்றும் அழைப்புகளின் நேர நீட்டிப்பின் மூலம் சமாளித்து பொத்தான்களை அமுக்கும் பணியை செய்துமுடித்தன. என்றாலும் மிகக் குறைவான ஓசையில் இருந்து மிக அதிக ஓசை ஏற்படுத்தப்பட்டபோது அவற்றால் முழுமையாக நிலைமையை சமாளிக்கமுடியவில்லை.
வெற்றி சதவிகிதம்
அவற்றின் வெற்றி சதவிகிதம் அப்போது 85 சதவிகி தத்தில் இருந்து 62.5 சதவிகிதமாகக் குறைந்தது. அதிக சத்தம் ஏற்படுத்தப்பட்டபோது டால்பின்கள் தங்கள் உடல் மொழியை மாற்றிக்கொண்டன. ஒருவரையொருவர் முகத்துக்கு முகம் நேராகப் பார்க்கும்வகையில் தங்கள் நடவடிக்கையை அமைத்துக்கொண்டன. குறுகிய நீர் வழியில் அருகருகில் நீந்தும்வகையில் செயல்படத் தொடங்கின.
செயல் திறன் பாதிப்பு ஆய்வின்போது
உருவாக்கப்பட்ட ஓசை கடற்சூழலில் உண்மையில் நிலவும் ஆழ்குழாய் தோண்டுதல், கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் ஓசையின் அளவிற்கு உரு வாக்கப்பட்டது. ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து ஒருங்கி ணைந்து செயல்படும் திறமை மிக்க, இட்ட பணியை செம்மையாக செய்யும் ஆற்றல் உடைய, அதிக உணர்வூக்கம் பெற்ற உயிரினங்களே இவை என்றாலும் உருவாக்கப்பட்ட பெரும் ஓசையால் அவை வெற்றி கரமாக செயல்பட முடியாமல் போனது.
காற்றில் ஒலி பரவுவதை விட 4.5 மடங்கு அதிக வேகத்துடன் அது நீரில் பயணம் செய்கிறது. அதனால் பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் நீரில் ஒலியையே வழியறிய, இரையைக் கண்டறிய, எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தகவல்களைப் பகிர்ந்துகொள்ள பயன்படுத்துகின்றன.
முதுகெலும்பற்றவை மற்றும் மீன்கள் குறைந்த அலை நீளம் உடைய ஒலியை உணரும் திறன் பெற்றவை. ஆனால் கடலில் வாழும் ஒரு வகை மீனுருவ உயிரி னங்கள் (Cetaceans), டால்பின்கள், திமிங்கலங்கள் இருநூறு கிலோஹெர்ட்ஸ் (KHZ) அலை நீளத்திற்கு உள்ள ஒலி மற்றும் சோனார் (SONAR) எனப்படும் மீ ஒலியை பொருட்களை அறிய, இரை பிடிக்கப் பயன்படுத்துகின்றன.
ஆழ்கடலில் ஒலி மாசு
கோணல் முதுகு திமிங்கலங்கள் (Humpback whales) குறைவான அலை நீளத்துடன் பாடும் பாடல்களை 16,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலும் கேட்கமுடியும். உலகக் கடற்பரப்பில் சில இடங்களில் நீருக்கடியில் இயற்கையான சத்தங்களை விட மனிதச் செயல்க ளால் உண்டாக்கப்படும் செயற்கையான ஓசைகள் அதி கரித்துவிட்டன. கப்பல் போக்குவரத்து, ஆழ்கடற்பரப் பில் ஏற்படுத்தப்பப்டும் அதிர்வுகள், எண்ணை எடுத்தல் மற்றும் கடற்கரைக்கு அப்பால் நிறுவப்பட்டுள்ள ராட்சச காற்றாளைகளே இதற்குக் காரணம்.
கருணைக்கொலை
இந்த சத்தங்களின் அதிகரிப்பு திமிங்கலங்கள் போன்ற உயிரினங்களிடையில் வழி தெரியாமல் கரையொதுங்கு தல், அதன் மூலம் உயிரிழத்தல், உடற்கரைசல்களில் கரைந்துள்ள வாயுக்கள் குமிழ்களாக வெளிவரும் நோய் (decompression sickness), நடத்தை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. கடலுக்கு அடியில் ஏற்படும் ஒலி மாசால் 2020 செப்டம்பரில் ஆஸ்திரேலியா டாஸ்மேனியாவின் மேற்குக்கரையில் அந்நாட்டு வரலாற்றில் மிக அதிக அளவாக 450 பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கின. உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாக இருந்ததால் அவற்றில் பல கருணைக்கொலை செய்யப்பட்டன.
நார்வல் (Narwhals) என்னும் ஆர்க்டிக் பகுதியில் வாழும் சிறிய திமிங்கலங்கள் எண்ணை மற்றும் வாயுக்கள் இருப்பதைக் கண்டறிய நிறுவனங்கள் அதிக ஓசையை எழுப்பும் அதிர்வலை ஏர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் போது அந்த பெரும் ஓசையில் இருந்து தப்பிக்க அவை உடனடியாக வேறு இடத்திற்கு அதிவேகமாகத் தாவு கின்றன. இதற்காக இயல்பான ஆற்றலை விட அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. இது அந்த உயிரினங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஆழ்கடலில் ஒலி மாசின் அளவைக் குறைக்க எண்ணை துரப்பன கட்டுமானங்கள் இருக்கும் இடங்களைச் சுற்றி ஓசை வெளிவராமல் இருக்க வலையமைப்புகள் ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. கப்பல் என்ஜின்களின் ஓசையைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் ஆண்டின் சில நேரங்களில் சில குறிப்பிட்ட இடங்களில் கப்பல் போக்குவரத்தைத் தவிர்க்க நட வடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற செயல்களால் மட்டுமே கடலையும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களையும் நம்மால் காப்பாற்றமுடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.